உலகில் முதன் முறையாக, மனித கறி விற்பனையா ? உண்மை இதுதான்..

ஜப்பானில் இருக்கும் ‘சாப்பாட்டு சகோதர்கள்’ என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த உணவகத்துக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 100 டாலரில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 1193 டாலர் வரை உணவுகள் கிடைக்கிறது. மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த உணவகம் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர்.

ஒரு உடலை இவர்கள் 35,799 டாலர் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர். தற்போது அந்த உணவகத்தில் சாப்பிட்ட சில மக்கள் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ”இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது.பன்றி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இது முழுவதும் கற்பனையாக எழுதபட்ட ஒரு செய்தி என தெரிய வந்து உள்ளது.

ஜூலை 2016 ல், ஒரு ஸ்பானிஷ் “நையாண்டி தினசரி” வலை தளம் ஒன்று ‘சாப்பாட்டு சகோதர்கள்  என்ற ஒரு செய்தியை வெளியிட்டது. நவம்பர் 2017 இதனை பல இணைய தளங்கள் வெளியிட்டன. ஒரு மெக்சிகன் செய்தி தளம்  ஒன்று , 29 நவம்பர் 2017 அன்று கதையை  போலியானது என கூறி உள்ளது.

-athirvu.com