மகாதிர்: ஜோ லவ்வை பிடிப்பதற்கு அழகான பெண்களைப் பயன்படுத்த வேண்டும்

 

ஜோ லவ்வை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று டாக்டர் மகாதிர் கூறினார்.

முதலாவது, பெண்களை வைத்து அந்த பினாங்கில் பிறந்த வணிகரை வசீகரிக்க வேண்டும்.

ஜோ லவ் செல்வாக்கு மிக்க சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார். எப்படி அவர் தப்பித்தார் என்று தெரியவில்லை

“நல்ல மணம் வீசும், புன்னகை பூத்த முகம் ஆகியவற்றை கொண்ட பெண்களை வைத்து அவரை வசீகரிக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற விரும்புகிறேன். அவரைப் பிடித்து விடலாம்”, என்று ஒரு கருத்தரங்கில் இன்றிரவு மகாதிர் கூறினார்.