ஆப்கானிஸ்தானில் தற்கொலைபடை தாக்குதல்: 11 பேர் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே உள்ள பனாயி என்ற பகுதியில் தனியார் கட்டிடத்தில் இரவு நேரத்தில் புகுந்த தற்கொலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் உட்பட 11 பேர் உடல்சிதறி பலியாகினர். 25 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

-dailythanthi.com