அம்னோ கிளந்தானை பாஸுக்கு விட்டுக் கொடுக்கப்போகிறதா? அபத்தம் என்று விளாசுகிறார் முஸ்தபா

14வது    பொதுத்   தேர்தலில்   கிளந்தானை   பாஸுக்கே    விட்டுக்கொடுக்க   அம்னோ  தலைவர்   நஜிப்   அப்துல்  ரசாக்   பாஸ்   தலைவர்  அப்துல்  ஹாடி   ஆவாங்குடன்   ஒரு   இரகசிய  உடன்பாடு    செய்து  கொண்டிருப்பதாகக்  கூறப்படுவதை   அபத்தம்    என்று   கிளந்தான்  அம்னோ  தலைவர்   முஸ்தபா   முகம்மட்  சாடியுள்ளார்.

பார்டி  பிரிபூமி   பெர்சத்து   மலேசியா  (பிபிபிஎம்)  உச்சமன்ற   உறுப்பினர்   ஏ.காடிர்  ஜாசின்  அப்படியொரு  புரளியைக்  கிளப்பி    விட்டிருக்கிறார்   என்றும்  அது   ஒரு   தேர்தல்   தந்திரம்  என்றும்   அவர்   சொன்னார்.

“14வது  பொதுத்   தேர்தல்  வருவதைக்   கருத்தில்கொண்டு      எனக்கும்  நஜிப்புக்குமிடையே   பிளவு  ஏற்படுத்த முனைகிறார்கள்.

“கிளந்தானைக்  கைப்பற்றுவதில்   பிஎன்னுக்கு  அக்கறை  இல்லை   என்பதைக்   காட்டுவதற்காக  அப்படியொரு  ஒரு   முயற்சி   நடைபெறுகிறது”,  என்றார்.

அனைத்துலக  வாணிக,  தொழில்   அமைச்சருமான   முஸ்தபா,   14வது   பொதுத்   தேர்தலில்   கிளந்தான்  பிஎன்   கிளந்தானில்   பாஸ்    ஆட்சிக்கு  முடிவு  கட்டும்   என்று  நம்புகிறார்.

“மும்முனைப்  போட்டி   என்றால்  வாக்குகள்   சிதறும்   அது   பிஎன்னுக்கு   சாதகமாக   அமையும்.  பாஸ்மீது  மக்கள்   அதிருப்தி  கொண்டிருப்பதால்   கிளந்தானைக்  கைப்பற்ற   காலம்   கனிந்துள்ளது”,  என்றாரவர்.