‘சுராங்கனி’ புகழ் ஏ.இ.மனோகரன் மறைவு!

ஈழத்துப் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் காலமானார்.

சென்னை, திருவான்மையூர், கந்தன்சாவடியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை இரவு 07.20 மணியளவில் காலமானார்.

ஈழத்து பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த ஏ.இ.மனோகரன், தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

அவரின், “சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா” என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார்.

பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் அவர் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும்.

-4tamilmedia.com