வெற்றியைக் கொண்டுவந்த அரசாங்கத்திடமே வாக்காளர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்: மகாதிர்

எந்த  அரசாங்கம்    சாதனைகளைச்   செய்து  தடம்  பதித்துள்ளதோ   அந்த    அரசாங்கத்துக்கே  வாக்காளர்கள்   வாக்களிக்க    வேண்டும்   என்று    டாக்டர்    மகாதிர்  முகம்மட்   வலியுறுத்தினார்.

இப்போதைய   ஆட்சியில்   மக்கள்   துன்பங்களை   அனுபவிக்கிறார்கள்  என்று   1981-இலிருந்து   2003வரை   ஆட்சியிலிருந்த   முன்னாள்  பிரதமர்   கூறினார்.

“நாட்டை  மேம்படுத்தும்   திறனை   வெளிப்படுத்திய   அரசாங்கத்திடமே   திரும்பிச்  செல்ல   வேண்டும்.

“இப்போது    அவதிப்படுகிறோம்.  முன்பு   வேலை,  உதவிச்  சம்பளங்ம்,  வணிக   வாய்ப்புகள்,   உரிமங்கள்   கிடைப்பதில்     பிரச்னை  இருந்ததில்லை”,  என்றவர்  இன்று  காலை    முகநூல்  உரையில்  கூறினார்.