டிஏபி மறுதேர்தலில் எல்லா நிபந்தனைகளும் பின்பற்றப்பட்டுள்ளன- ஆர்ஓஎஸ்

அண்மையில் நடந்த டிஏபி மறுதேர்தலில் எல்லா நிபந்தனைகளும் சரிவர பின்பற்றப்பட்டிருந்ததாக சங்கப் பதிவகம்(ஆர்ஓஎஸ்) இன்று கூறியது.

இதுவரை நடந்துள்ள விசாரணைகளின் அடிப்படையில் இம்முடிவுக்கு வந்திருப்பதாக ஆர்ஓஎஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாக பெர்னாமா கூறியது.

“ஆர்ஓஎஸ்ஸின் அதிகாரத்துவ முடிவு திங்கள்கிழமை கடித வாயிலாகத் தெரிவிக்கப்படும்”, என அவ்வறிக்கை கூறிற்று.

அதற்கு உடனடி எதிர்வினை ஆற்றிய டிஏபி ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தோனி லோக், அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்ததும் அது குறித்து கருத்துரைக்கப்படும் என்றார்.

“அது கையில் கிடைத்ததும் கட்சி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.