ஹுசாம், முன்னாள் எம்பி ஆகியோரின் டத்தோ பட்டங்கள் பறிக்கப்பட்டன

சாலோர்   சட்டமன்ற   உறுப்பினர்   ஹுசாம்  மூசா,   முன்னாள்   கோத்தா   பாரு   எம்பி  வான்  அப்ட்  ரகிம்   ஆகியோர்   நேற்றிலிருந்து     டத்தோக்கள்  அல்ல.

அவர்களுக்கு  வழங்கப்பட்டிருந்த  பட்டங்கள்  மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கிளந்தான்  மாநிலச்   செயலாளர்   நேற்று   மாலை   ஒரு    கடித  வாயிலாக  இதைத்   தெரிவித்திருந்தார்   என   ஹுசாமும்   வான்  அப்ட்  ரகிமும்   ஒரு  கூட்டறிக்கையில்   கூறினர்.

தாங்கள்   இருவரும்   டத்தோ  பட்டத்துக்குரிய   சின்னங்களை   இன்று  காலை   அரண்மனையிடம்   திருப்பிக்  கொடுத்ததாக    அவர்கள்   கூறினர்.

“இவ்வேளையில்,  சுல்தானுக்கு   நன்றி   தெரிவிப்பதுடன்  எங்கள்    பிளவுபடாத  விசுவாசம்    சுல்தான்  ஐந்தாம்  முகம்மட்டுக்குத்தான்  என்பதையும்   வலியுறுத்திக்  கூறிக்கொள்கிறோம்”,  என்றார்கள்.