அன்வார்: முகாபே போல் அல்லாமல் மகாதிர் சீரமைப்புகளில் அக்கறை கொண்டுள்ளார்

டாக்டர்   மகாதிர்  முன்னாள்   ஸிம்பாப்வே  அதிபர்  ரோபர்ட்  முகாபே   போன்றவர்   அல்ல  என்கிறார்   அவரின்  முன்னாள்   எதிரியும்  இந்நாள்  தோழருமான  அன்வார்  இப்ராகிம்.

முகாபேபோல்   அல்லாமல்   மகாதிர்  சீர்திருத்தங்களில்  அக்கறை   காட்டுகிறார்   என்றாரவர்.

இன்று  நீதிமன்றத்துக்கு   வெளியில் ,   அன்வாரைச்   சந்தித்த   செய்தியாளர்கள்,   பக்கத்தான்  ஹரபான்  தலைவர்     என்ற  முறையில்   மகாதிர்  சீரமைப்புப்  பணிகளைச்   செய்வாரா  என்று  வினவியதற்கு   அவர்   அவ்வாறு  கூறினார்.

“மகாதிர்  மாறத்  தயாராகி  விட்டார்.  அரசாங்கம்  போதுமான  அளவுக்கு   அவரை   அவமானப்படுத்தி  விட்டது”,  என்றாரவர்.