மருத்துவமனையில் மகாதிர்

பக்கத்தான்   ஹரபான்    தலைவர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்   நேற்றிரவு  தேசிய  இருதயச்  சிகிச்சைக்கழக (ஐஜேஎன்)த்தில்   சேர்க்கப்பட்டார்.

“இப்போது    பொது   வார்டில்  உள்ள  மகாதிருக்கு   மார்புச்  சளிக்கும்     இரூமலுக்கும்  சிகிச்சை    அளிக்கப்படுகிறது”,  என  முன்னாள்   பிரதமரின்   முகநூலில்  வெளியிடப்பட்டுள்ள  மருத்துமனை    அறிக்கை  கூறிற்று.

“சில  நாள்களுக்கு   டாக்டர்   மகாதிர்   இங்கு  வைக்கப்பட்டுக்  கவனிக்கப்படுவதுடன்  சிகிச்சையும்   அளிக்கப்படும்.

“நெருங்கிய  குடும்ப  உறுப்பினர்கள்  மட்டுமே    அவரைச்    சந்திக்க    அனுமதிக்கப்படுவார்கள்”,  என்று   அது   கூறியது.

இதனிடையே,  மகாதிரின்  மகள்   மரினா    அவரின்  தந்தை  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தாலும்   திடமாக  இருப்பதாக  டிவிட்டரில்   பதிவிட்டிருந்தார்.

“விரைவில்  திரும்பி  வந்து   பட்டையைக்  கிளப்புவார்”,  என்று  கூறிய  மரினா, 93வயது   தந்தையுடன்   எடுத்துக்கொண்ட  புகைப்படமொன்றையும்    வெளியிட்டிருந்தார்.