வீ கா சியோங்கை எதிர்த்து டிஎபி போட்டியிடும்

 

அடுத்த பொதுத் தேர்தலில் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கை எதிர்த்து ஜோகூர் ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் டிஎபி போட்டியிடும் என்பதை அக்கட்சி உறுதி செய்துள்ளது.

முன்னதாக, ஆயர் ஹீத்தாம் தொகுதியில் அமனா வேட்பாளர் டிஎபி சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அமனாவுக்கு 12 மாநில சட்டமன்ற இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் டிஎபிக்கு ஒரு கூடுதல் இருக்கை கிடைக்கவில்லை. ஆகவே, ஆயர் ஹீத்தாம் தொகுதியை டிஎபி எடுத்துக்கொள்ள விரும்பியது என்று டிஎபியின் அந்தோணி லோக் கூறினார்.

இன்று, ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் டிஎபி போட்டியிடும் என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக கூற முடியும் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.