பாகிஸ்தானின் இரும்பு மங்கை, மரணம்..

பாகிஸ்தான் நாட்டின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் அஸ்மா ஜெகாங்கீர்  நேற்று முன்தினம் மரணமடைந்தார். 66 வயதான இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர் அஸ்மா ஜெகாங்கீர். மிகச்சிறந்த வழக்கறிஞரான இவர் மனித உரிமைகளுக்காக போராடி வந்தார். இவர் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவர் என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க போராடினார். அதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவரது மரணத்திற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் சமூக ஆர்வலர் மலாலா, அஸ்மா மரணம் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு எனக் கூறியுள்ளார்.

-athirvu.com