தற்போது பிச்சை கேட்க்கும் சம்பந்தர்: இதனை விட தூக்கு போட்டு சாகலாமே ? தமிழனை ஈனத் தமிழனாக ..

மகிந்தரை நாம் வரவேற்கிறோம். ஒரு நல்ல கருமத்தை ஆற்ற அவர் எங்களோடு இணைந்து செயல்பட அவரை நாங்கள் அழைக்கிறோம். மகிந்த பெற்ற வெற்றியானது பெரும் வெற்றி. அவர் நாட்டின் ஒரு சிறந்த தலைவர் என்பதனை இது எடுத்துக் காட்டுகிறது என்று சம்பந்தர் கூறியுள்ளார்.

வெற்றிபெற்ற வேட்பாளர்கள் சிலரை தனது வீட்டுக்கு அழைத்து பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதாவது நாடில் ஒரு நல்ல காரியத்தை ஆற்ற எம்மோடு ஒத்துப் போகும் படி இவர் கூறுவது, தமிழர்களின் தீர்வு திட்டத்தை தான். ஆனால் நாட்டில் தமிழர்கள் சுய அந்தஸ்தோடு வாழப் போகிறார்கள், என்று சிங்களவர் மத்தியில் கூறி வாக்கை பெற்று வெற்றியடைந்துள்ளார் மகிந்த.

இது கூட தெரியாமல் அவரிடம் பிச்சை எடுக்கும் நிலையில் சம்பந்தர் உள்ளார். கேட்டால் இது அரசியல் சாணக்கியம் என்பார்கள். பெரும் காய் நகர்த்தல் என்பார்கள்… கூட்டமைப்பின் ஆதரவாளர்கள். மகிந்தவிடம் பிச்சை எடுத்து தான் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டுமா ? அதற்காக தான் 44,000 போராளிகள் போராடி இறந்தார்களா ? போரடிய புலிகளை வேற்று நாட்டு ஆட்களை போல பார்கிறது இந்த கூட்டமைப்பு. வெட்கம் கெட்ட அரசியல் செய்து, மிஞ்சியுள்ள தமிழர்களின் மானத்தையும் வாங்கி, ஈனப் பிறவிகள் ஆக்குகிறார் இந்த சம்பந்தர்…

-athirvu.com

TAGS: