சினிமாவின் புகழ் மட்டும் அரசியலுக்கு போதாது: நடிகா் கமல்ஹாசன்

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளா்களை சந்தித்து பேட்டி அளித்தார்.  அப்போது அவா் கூறியதாவது,

“அரசியலில் நான் வளா்ச்சி பெறுவதற்கு சினிமாவில் கிடைத்த புகழ் மட்டும் போதாது” என தெரிவித்தார்.

பின்னா்  “ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளை மன்னித்தது, ராகுல்காந்தியின்  மனித நேயத்தை சுட்டிக்காட்டுகிறது”.

ஆனால் நாம் அனைவரும் கேட்பது சட்டத்தின் தளா்வு தான், மனித நேயம் வேறு, சட்டத்தின் தளா்வு வேறு.

இதைத்தொடா்ந்து, “கிறிஸ்தவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்ததாக

கூறுவது அா்த்தமற்ற குற்றச்சாட்டு.  மேலும் எனக்கு இதனை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது.”  இவ்வாறு அவா் கூறினார்.

-dailythanthi.com