ஆயர் ஹீத்தாம் ஹரப்பான் வேட்பாளரை மகாதிர் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்

 

ஜோகூர், ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதிக்கான ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளரை அக்கூட்டணியின் தலைவர் மகாதிர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்.

மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்ஙின் கோட்டையான அத்தொகுதியில் டிஎபி அதன் 52 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது அந்த அறிவிப்பு செய்யப்படும் என்று டிஎபி அதன் அறிக்கையில் கூறுகிறது.

அத்தொகுதிக்கான ஹரப்பானின் வேட்பாளர் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், அந்த வேட்பாளர் ஜோகூர் டிஎபியின் தலைவர் லியு சின் தோங் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி காலை மணி 10.00 அளவில் ஆயர் ஹீத்தாம் ஹரப்பான் தேர்தல் மையத்தில் நடத்தப்படும். டிபியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் ஹரப்பான் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்பர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்கள் வரவேற்கக்கப்படுகின்றனர் என்று டிஎபி கூறுகிறது.

அதே நாள் பின்னேரத்தில், ஜோகூர் ஜெயா தொகுதியில் மசீச ஒரு பேரணியை நடத்துகிறது. அதன் கருப்பொருள்: “மசீசவை ஆதரியுங்கள், ஜோகூர் குழுவை வலுப்படுத்துங்கள்” என்பதாகும். மசீச தலைவர் லியோ தியோங் லாய் தலைமையில் அந்நிகழ்ச்சி நடைபெறும்.