செகாமாட் இராணுவ வாக்காளர்களுக்கு எதிரான மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

வாக்காளர்  பட்டியலில்    949  இராணுவ   வாக்காளர்களையும்    அவர்களின்  துணைகளையும்    சேர்த்துக்கொண்டது   செல்லாது  என்று    அறிவிக்கக்  கோரி    டிஏபியையும்   அமனாவையும்   சேர்ந்த   48  வாக்காளர்கள்   செய்துகொண்ட   மனுவை    கோலாலும்பூர்   உயர்   நீதிமன்றம்   தள்ளுபடி   செய்தது.

949  இராணுவ  வாக்காளர்களின்   பெயர்களும்  அரசிதழில்
தேர்தல்  ஆணைய(இசி)த்தால்  வெளியிடப்பட்டு   விட்டன   என்பதால்   இனி  அதை   நீதிமன்றம்  விசாரிக்க  இயலாது   என  நீதிபதி   கமாலுடின்  முகம்மட்  சைட்   தீர்ப்பளித்தார்.

“ நீதிபதி   தேர்தல்   சட்டம்  பிரிவு  9ஏ-யைச்  சுட்டிக்காட்டினார்.  அச்சட்டப்  பிரிவு   ஒரு  பெயர்   அரசிதழில்    இடம்பெற்று  விட்டால்  பிறகு   அது   நீதிமன்ற  ஆய்வுக்கு   உட்பட்ட   விசயமாகாது   என்கிறது”,  என   மனுதாரர்களின்   வழக்குரைஞர்  மிச்சல்   இங்    கூறினார்.