26 சிங்களப் படையினரை கொன்றார்கள்: 3 முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் மீது வழக்கு போடப்பட்டது..

26 படையினர் கொலை.. 3 முன்னாள் புலி உறுப்பினர்களின் வழக்கு பதிவு வவுனியாவில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேரின் வழக்கு விசாரணை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவ வீரர்கள் வவுனியாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிராக , குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதன் தீர்ப்பிற்கு அமையவே வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு குறித்த வழக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.com

TAGS: