இசைஞானி இளையராஜா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் !

இசைஞானி இளையராஜா இசையில் மயங்காத ஆட்களே கிடையாது, ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான சில விஷயங்களை பேசக்கூடியவர்.

அப்படி சமீபத்தில் அமெரிக்கா வில் உள்ள கூகள் அலுவலகத்தில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை. பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்று சர்ச்சையான விஷயத்தை பேசினார்.

இதனால் கிறிஸ்தவ மக்கள் அவரது வீட்டை நேற்று முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா மீது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், இயேசு கிறிஸ்து உயிரித்தெழுந்தார் என்பது உலகத்தில் உள்ள அணைத்து கிறிஸ்தவரிகளின் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் இயேசு கிறிஸ்தவ உயிரித்தெழுந்தா தினத்தை கொண்டாடவுள்ளோம் இந்த நேரத்தில் இளையராஜா, இயேசு உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

-cineulagam.com