லண்டனில் 12 நாட்களில் 10 பேர் கொலை: வீதிகளில் பெரும் அச்சம் நிலவி வருகிறது …

லண்டனில் கடந்த 12 நாட்களில் சுமார் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று மெற்றோ பொலிடன் பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்கள். இவற்றில் 90 சதவிகிதமானவை கத்திக் குத்து சம்பங்களே ஆகும். லண்டன் வீதிகளில் பல குண்டர்கள் உலவி வருகிறார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் ஒரே ஆயுதம் கத்தி தான். இவர்கள் தனி நபர்களாக இல்லையேல் காங்காக உலகவி வருகிறார்கள் என்றும்.

கஞ்சா முதல் கொண்டு சகல போதைப் பொருட்களை இவர்கள் விற்று வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி சண்டை நடக்கிறது. இதில் ஒருவர் பலியாவது சகஜமாகி விட்டது என்கிறார்கள் பொலிசார். தமிழர்கள் அதிகமாக வாழும் சவுத்ஹால் பகுதி முதல் கொண்டு பல நகரங்களில் வீதிகள் பாதுகாப்பு அற்ற இடமாக மாறி வருகிறது.

காலை நேரம் இரவு நேரம் என்று எந்த நேரம் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. பெருகிவரும் இக் கொலைச் சம்பவங்களால் பல பெற்றோர் தமது இள வயது பிள்ளைகளை வெளியே அனுப்ப , மிகுந்த அச்சமடைந்து வருகிறார்கள்.

-athirvu.com