மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுக்காலை கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார்.

கிளிநொச்சியில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, முல்லைத்தீவு செல்லும் போது, வழியில் காணாமல் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்துக்கு மங்கள சமரவீர, சென்றார்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

-puthinappalakai.net

TAGS: