விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் மரணம்..

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வெளிநாட்டில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த எஸ்.ஜே.மூர்த்தி (குணாலன் மாஸ்டர்) என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 1999ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி வெளிநாட்டிற்கு சென்று பல நாடுகளில் தங்கியிருந்த நிலையில், இறுதியாக தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளார்.

குணாலன் மாஸ்டர் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர் பெயர் பட்டியலிலும் உள்ளார் என குறித்த ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-athirvu.com

TAGS: