“அமைதியாக இருங்கள்! தமிழகத்துக்கு அறிவுரை அளித்த உச்சநீதிமன்றம்”

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வேறொரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதியிடம் தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா, ஏன் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகின்றன என்று கேள்வி எழுப்பியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டங்களை உடனே நிறுத்துமாறும், அமைதி காக்கும்படி அவர்களை வலியுறுத்துமாறும் தலைமை நீதிபதி வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் நலன் பாதுகாப்படும் என்று அவர் குறிப்பிட்டதாக விவரிக்கிறது அச்செய்தி.

-தினத்தந்தி

TAGS: