மகாதிர்: மலாய் சுனாமி இல்லையா? காத்திருந்து பாருங்கள்

 

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, பக்கத்தான் ஹரப்பான் ஜொகூரில் அம்மாநில மந்திரி பெசார் காலிட் நோர்டினின் தொகுதியான பாசி கூடாங்கில் ஒரு பெரும் பேரணியை நடத்துகிறது..

அப்பேரணிக்கு முன்னதாக பேசிய பக்கத்தான் ஹரப்பான் அவைத் தலைவர் மகாதிர் ஆளும் அம்னோ-பிஎன் அரசாங்கத்திற்கு எதிராக ஹரப்பான் ஒரு மலாய் சுனாமியை உண்டாக்க முடியும் என்பதை நிராகரிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார்.

“மலாய் சுனாமி இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். காத்திருங்கள். நீங்கள் பார்ப்பீர்கள்.

“உங்களை மலாய் சுனாமி என்றக்கும் மூழ்கடிக்கும்’, என்றாரவர்.

சீனச் சுனாமி மற்றும் இந்தியச் சுனாமி ஆகியவைகளும் இருக்கும் என்று மகாதிர் மேலும் கூறினார்.