வடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண சபை தீர்மானம்!

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து நேரில் சென்று ஆராய்வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது.

அதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதுக்கு வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்துள்ளனர்.

-puthinamnews.com

TAGS: