சல்மான் கான் வழக்கின் தீர்ப்பு

நடிகர் சல்மான் கான் அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் 5 வருடம் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு 50,000 ருபாய் பாண்டுடன் சல்மான் கான் விரைவில் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார்.

19 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே சல்மான் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சல்மான் தவிர வேட்டையின் போது அவருடன் இருந்த மற்ற 4 நடிகர் மற்றும் நடிகைகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

-cineulagam.com