ரஜனி கமல் இருக்க சத்தியராஜை பேசச் சொன்ன கூட்டம்!

நடிகர் சங்கம் நேற்று(8) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தற்போது ரஜனி மற்றும் கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட்டு வருவதால். நடிகர்களை பேசச் சொன்னால் இவர்கள் தமது வித்தியாசமான கருத்துக்களை முன்வைப்பார்கள் என்பதனை முன்னரே உணர்ந்த நடிகர் சங்கம். இது ஒரு மெளனப் போராட்டம் என்று லாபகமாக அறிவித்தார்கள். இதனல் இதில் ரஜனி மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொண்டாலும் வாய் அடைத்துப் போய் நின்றார்கள்.

இன் நிலையில் இந்த போராட்ட முடிவில், பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. என்ன என்று கேட்டால் அங்கே திரண்டு நின்ற பெரும்பாண்மையான மக்கள் சத்தியராஜ் பேசவேண்டும் என்று விடாப் பிடியாக கோஷம் போட்டார்கள். இதனால் ஒரு கணம் ரஜனி மற்றும் கமல் ஆகியோர் திகைத்துப் போனார்கள். மக்கள் கோஷம் பெருகவே, இறுதியாக சத்திராஜ் மைக்கை எடுத்து, நான் என்றும் தமிழன் பக்கம் ! மத்திய அசரை எதிர்போம். ஏன் ராணுவமே வந்தாலும் நாம் அஞ்ச மாட்டோம் என்று வீரமாக பேசினார். மக்கள் கை தட்டல் விண்ணை பிழந்தது….

-athirvu.com