வாக்களிப்பு நாளில் பள்ளிகளுக்குச் சிறப்பு விடுமுறை

மே  9-இல்    14வது   பொதுத்  தேர்தலுக்காக    பள்ளிகள்  மூடப்படும்.

சிறப்புக்  காரணத்துக்காக  அச்சிறப்பு   விடுமுறை   என்று  பராமரிப்பு   கல்வி  அமைச்சர்     மஹாட்சிர்  காலிட்    டிவிட்டரில்   பதிவிட்டிருந்தார்.

வாக்களிப்பு   நாளன்று   பள்ளிகள்   வாக்களிப்பு  மையங்களாகப்   பயன்படுத்திக்  கொள்ளப்படுகின்றன.

வார    நாளில்   தேர்தல்    நடத்தப்படுவது    1999க்குப்  பிறகு    இதுவே  முதல்முறையாகும்.  அதேபோல் ,     1959க்குப்  பிறகு  இப்போதுதான்  முதல்  முறையாக   புதன்கிழமையில்    தேர்தல்   நடைபெறுகிறது.