ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு..

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். கடந்த 60 நாட்களாக ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி ஆன நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்தன. ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க அந்நிறுவனம் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக ஆலையில் பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நீட்டித்துள்ளது.

-athirvu.com

TAGS: