பாஸ் உதவித் தலைவர் பிரிம் தொகையை ரிம2,500 ஆக உயர்த்துவாராம்

ஒவ்வொரு   கட்சியும்   அதன்   தேர்தல்   கொள்கை   அறிக்கையை  வெளியிட்டுக்  கொண்டிருக்கும்   வேளையில்   பாஸ்  சும்மா  இருந்து   விடுமா?  அதுவும்   அதன்   தேர்தல்  கொள்கையை   வெளியிட்டுள்ளது. அதில்    பிரிம்  தொகை  உயர்த்தப்படும்   என்று  வாக்குறுதி    அளித்துள்ளது.

பராமரிப்புப்  பிரதமர்    நஜிப்    அப்துல்  ரசாக்,  14வது   பொதுத்   தேர்தலில்   பிஎன்  வெற்றி   பெற்றால்   பிரிம்  தொகையை   உயர்த்தி   ஆளுக்கு  ரிம 2,000  கொடுப்பதாக   அறிவித்துள்ள  நிலையில்  பாஸ்   அதற்கும்   மேலே   கொடுக்க  முன்வந்துள்ளது.

பாஸ்   உதவித்   தலைவர்   முகம்மட்  அமார்   நிக்   அப்துல்லா   தேர்தலில்  பாஸ்  வெற்றி  பெற்று   அவர்   பிரதமரானால்    இப்போது  கொடுக்கப்படும்   பிரிம்  தொகை  ரிம2,500  ஆக  உயர்த்தப்படும்   என்றார்.

“இன்றிரவு   அறிவித்துக்  கொள்கிறேன்,  நாங்கள்   வெற்றி  பெற்று    நான்  பிரதமரானால்   ரிம2,500 உதவித்  தொகை  கொடுப்பேன்”,  என்றவர்  நேற்றிரவு  கோத்தா  பாருவில்  ஒரு  நிகழ்வில்   கூறினார்.