சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலுக்கு இல்லை – கன்னட நடிகர் ஆதங்கம் !

சமீபத்தில் காவேரி விஷயத்துக்காக சிம்பு கொடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர் கூறிய சில கருத்துக்கள் அவருக்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ஆனந்த் ராக் கொடுத்த சமீபத்திய பேட்டியில் “நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. தமிழர்கள் நல்ல மனிதர்கள். மிகவும் மென்மையானவர்கள். கன்னடர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

இளம் நடிகரான சிம்பு போராட்டம் நடத்தாமல் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வித்தியாசமான முறையில் கோரிக்கை விடுத்திருந்தார்.அவருக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலிடம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பழைய தமிழக அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். இந்தியா போன்ற கூட்டாட்சி நாட்டில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அவசியம். தமிழகத்துக்கு அந்த அடிப்படை தெரியவில்லை. நாம் அவர்களுக்கு அதை சொல்லித் தரவேண்டும் என்று நினைக்கிறேன்.என கூறினார்.

-cineulagam.com