15 பெண்கள் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்

போகோ ஹராமால் கடத்தப்பட்ட 112 சிபோக் பெண்களில் 15 பேர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என்று இஸ்லாமியவாத குழுவான போகோ ஹராமுடன் தொடர்பில் உள்ள நைஜீரிய பத்திரிகையாளர் ஒருவர் கூறி உள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போகோ ஹராமால் 276 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டார்கள். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் இவ்வாறாக அந்த பத்திரிகையாளர் கூறி உள்ளார். அந்த பத்திரிகையாளரின் பெயர் அஹமத் சல்கிடா. அரசின் சார்பாக அந்த பெண்களை மீட்பதற்காக அந்த குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால், அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாகவும் கூறுகிறார். ஆனால், நைஜீரியா அரசாங்கம் அந்த பெண்கள் இறந்திருக்கலாம் என்று எண்ணுவதற்கு ஒரு காரணமும் இல்லை என்கிறது. -BBC_Tamil