செகாமாட்டை மிகப் பெரிய பெரும்பான்மையில் மஇகா தக்க வைத்துக்கொள்ளும்- சுப்ரா நம்பிக்கை

செகாமாட்,  ஜெமெந்தா,  கெமாஸ்   பாரு,  பூலோ  காசாப்,  பத்து   அனாம்   ஆகிய   வட்டாரங்களில்   உள்ள   இந்தியர்களின்    வலுவான   ஆதரவு  மஇகா-வுக்கு   இருப்பதால்   அக்கட்சி   அந்த   நாடாளுமன்றத்   தொகுதியைத்   தக்கவைத்துக்கொள்ள  நல்ல  வாய்ப்பிருக்கிறது    என்கிறார்   கட்சித்   தலைவர்   டாக்டர்   சுப்ரமணியம்.

“எனக்கு      வரும்     அறிக்கைகள்    அப்பகுதிகளில்   மஇகாவுக்கு   இந்திய   சமூகத்தின்   ஆதரவு   70விழுக்காட்டிலிருந்து  80விழுக்காடாக  உயர்ந்துள்ளதைக்  காண்பிக்கின்றன.

“அந்தப்  புள்ளிவிவரத்தைப்   பார்க்கையில்    செகாமாட்டைத்   தக்க  வைத்துக்கொள்வதில்   பிரச்னை  இருக்காது”,  என  நேற்றிரவு   பத்து   அனாமில்  செகமாட்   நாடாளுமன்றத்   தொகுதிக்கான   மஇகா   தேர்தல்  இயந்திரத்தைத்   தொடக்கி   வைத்த  பின்னர்  சுப்ரமணியம்   பெர்னாமாவிடம்   தெரிவித்தார்.