நஸ்ரி: மகாதிரால் லங்காவிக்கு எதுவும் செய்ய இயலாது

டாக்டர்    மகாதிர்  முகம்மட்     14வது  பொதுத்   தேர்தலில்   லங்காவியில்  வெற்றி  பெற்றால்கூட    அதன்  மேம்பாட்டுக்கு   அவரால்    எதுவும்   செய்ய  இயலாது   என  அம்னோ   உச்சமன்ற    உறுப்பினர்   நஸ்ரி  அசீஸ்   கூறினார்.

கூட்டரசு   அரசாங்கத்தின்   ஆதரவு  இல்லாமல்    அவரால்  அதிகமாக  எதுவும்  செய்ய   முடியாது.

“எதிரணியில்   உள்ள    ஒருவருக்கு  எப்படி   உதவுவது?  எனவே,  அது  அவருக்கு  மட்டுமே  நன்மையாக  அமையும். (எம்பி என்பதால்)  சம்பளம்,  அலவன்ஸ்  கிடைக்கும்”.

பக்கத்தான்   ஹரப்பான்   மகாதிரை  லங்காவியில்   களமிறக்க   செய்துள்ள  முடிவு  குறித்துக்  கருத்துரைத்தபோது    நஸ்ரி   அவ்வாறு   கூறினார்.

-பெர்னாமா