அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைக்கிறோம்: இரா.சம்பந்தன்

நாட்டை பிரிக்க முடியாதவாறு, அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், “எதிர்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்படுவது அநாகரிகமானது. எனினும், அவ்வாறு கொண்டுவரப்பட்டால் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: