ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்களை கண்ணிய குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கை வைத்து பேசிய சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடா்பாக பெண் பத்திரிகையாளா்களை தரகுறைவாக சித்தரித்து ட்விட்டா் பதிவு ஒன்றை எஸ்.வி.சேகர் வெளியிட்டிருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர். தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடர்பில், பா.ஜ.க.வின் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜாவும் தரகுறைவான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமார் இது தொடா்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொடா்ந்து சா்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபா் சைக்கோக்கள். முதல்வர் பற்றி அவதூறாக பேசிய ஹெச்.ராஜா மீது அரசே வழக்கு தொடரும். பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்யும். ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு விளம்பரம் தேடுவதே வேலை.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: