டிஎபி மனோகரன் காத்துக் கொண்டிருக்கிறார்

 

முன்னாள் இசா கைதியும் கோத்தா அலாம் ஷா முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். மனோகரன் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட டிஎபி வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்தைத் தொடர்ந்து தமக்கு பெரும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து டிஎபியின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தமது முகநூலில் பதிவு செய்துள்ளார் வழக்குரைஞருமான மனோகரன்.

2008 இல், டிஎபி வேட்பாளராக கோத்தா அலாம் ஷாவில் போட்டியிட்ட மனோகரன் 7,184 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

1999 இல், டிஎபியின் செகாம்புட் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட மனோகரன் அதில் தோல்வியுற்றார்.