மலேசியாகினி இரண்டு வாரங்களுக்கு இலவச செய்தி வழங்கும்

 

கடந்த பொதுத் தேர்தல்கள் போல, இன்றிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு மலேசியாகினி செய்திகள் இலவசமாக வழங்கப்படும்.

மலேசியாகினி சந்தாதாராக இல்லாதவர்கள் அதன் செய்திகள் மற்றும் கருத்துப் பதிவுகளைத் தெரிந்துகொள்வதற்கு தங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து கொண்டால் போதுமானது. மலேசியாகினி சந்தாதார்களுக்கு அவர்களின் தற்போதைய சந்தா இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும்.

சுதந்திரமான செய்திக்கு வாக்காளர்கள் மலேசியாகினியை நம்பியிருப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே, இந்த இலவச சேவையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று மலேசியாகினியின் தலைமை செயல்முறை அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.