பழனி முருகன் உற்சவர் சிலைகளும் ஆய்வு! ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் அதிரடி!

பழனி முருகன் திருக் கோயிலுக்கு  ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி நடந்து இருப்பது தெரிந்ததின் பேரில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்தனர். தற்பொழுது நிபந்தனை ஜாமீனிலும் வந்துள்ளனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாசனமான ஞான தண்டாயுதபாணி (முருகன்) சிலைதான் பழனி மலையில் உள்ள  மூலஸ்தானத்தில் உள்ளது. அப்படிபட்ட நவப்பாசன முருகன் தான் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வருவதால் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து இந்த முருக பெருமானை தரிசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் போகரால் உருவாக்கபட்ட முருகனின் நவப்பாசன சிலை பழுதடைந்துள்ளதால் அதை மாற்றி அமைக்கவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் கடந்த 2004ல் முதல்வராக  இருந்த  ஜெவிடம் வலியுத்தினார். அதை தொடர்து தான் அப்பொழுது இருந்த கோவில் இ.ஓ. ராஜா மூலமாக கும்பகோணத்தை சேர்ந்த  அரசு சிலை சிற்பியான ஸ்தபதி முத்தையாவிடம் பத்து கிலோ தங்கம் கொடுத்து ஐம்பொன்னால் 200 கிலோ அளவில் முருகனின் மூலவர் சிலை செய்ய  சொல்லப்பட்டது.

ஆனால் இஓ ராஜாவும், முத்தையாவும் விதி முறைப்படி ஐம்பொன் சிலை செய்யாமல் இருவரும் கூட்டு கொள்ளை அடிப்பதற்காக சிலையில் அதிமாக செம்பு கலந்ததுடன் மட்டும்மல்லாமல் ஒரு துளி வெள்ளி கூடமுலாம் பூசாமலேயே 21 கிலோ கூடுதலாக சேர்ந்து 221 கிலோ எடையில் ஐம்பொன் சிலை செய்து விட்டு  சிலைக்கு பயன்படுத்த வேண்டிய 41/2கிலோ தங்கத்தை மோசடி செய்து இருவரும் பங்கு போட்டு கொண்டு இச்சிலையை ஜெ. அனுமதியின் பேரில் அப்போதை மூலவ நவப்பாசன சிலையை மறைத்து வைத்தனர்.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்ததின் பேரில் அந்த  ஐம்பொன் சிலையை அகற்றி ஸ்டோர் ரூம்பில் போட்டு விட்டனர். இந்த நிலையில் தான்  அந்த ஐம்பொன் சிலையில் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது. 14 வருடங்களுக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யான பொன் மாணிக்கவேலுக்கு பல புகார்கள் வந்ததின் பேரில் கடந்த வாரம்  சிலை செய்ததில் மோசடி செய்த ஸ்தபதி முத்தையாவையும், முன்னால் கோவில் இ.ஓ. ராஜாவையும்  சிலை தடுப்பு காக்கிகள் கைது செய்தனர்.

Palani Murugan

அதை தொடர்ந்து தான் அந்த சிலை செய்தது அப்பொழுது யார். யார் பணிபுரிந்தனர் அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிப்பதற்காக ஐ.ஜி. பொண்மாணிக்கவேல் தலைமையில்  துணை கண்கானிப்பாளர் கருணாகரனுடன் இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் கடந்த மாதம் பழனிக்கு  விசிட் அடித்து   தற்பொழுது இ.ஓ. வாக இருக்கும் செல்வராஜ் மற்றும் மேனேஜர் உமாவை விசாரணைக்கு வரச்சொல்லி காலை முதல் மாலை வரை அதிரடி விசாரணை செய்தனர்.

அப்பொழுது 2004 முதல் தற்பொழுது வரை பணிபுரிந்து வரும் அதிகாரிகளின் லிஸ்டை கேட்டதின் பேரில்  இ.ஓ.செல்வராசும், மேனேஜர் உமாவும் அந்த  லிஸ்டை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து தான் சிலை தடுப்பு காக்கிகள் தொடந்து விசாரணையில் இருந்து வந்தனர். அதோடு இந்த மோசடியில் பலர் சிக்கப் போகிறார்கள். இப்படி சிலை மோசடியில் சிக்கி இருக்கும், அதோடு சிக்கப்போகும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை  வரை வாங்கி கொடுப்பேன் என  நமது நக்கீரனுக்கு கூட வெளிப்படையாகவே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டி கொடுத்து இருந்ததை வெளியிட்டு இருக்கிறோம்.

இந்த நிலையில் தான்  இபிஎஸ். ஒபிஎஸ் அரசு திடீரென  இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டது. இதை கண்டு பொண்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏற்கனவே பல வழக்குகள்  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கிடப்பில் தான் விசாரணை இருக்கிறது. அது போல் ஐம்பொன் சிலை மோசடி வழக்கும் கிடப்பில் போடுவதற்காக மாற்றப்பட்டு இருக்கிறது. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு  இந்த வழக்கு மாற்றி இருக்கலாம் என்ற பேச்சு பரபரப்பாக பேசப்பட்டும் வந்தது.  இந்த நிலையில் தான் ஐம்பொன்சிலை மோசடி வழக்கில் திருச்சி சிறையில் இருந்த ஸ்பதி முத்தையாவுக்கும் ராஜாவுக்கும்மதுரை ஐகோட்டு ஜாமின் வழங்கியதுடன் மட்டுமல்லாமல் இந்த வழக்கை மீண்டும் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி யான பொன் மாணிக்கவேலே விசாரிப்பார் என ஐகோட் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்இந்த சிலை மோசடி வழக்கு விசாரணையை  தொடங்கினார்.

அதன் அடிப்படையில் தான் கடந்த 4ம் தேதி சிலைதடுப்பு பிரிவு டி.எஸ்.பி.கருணாகரன் தலைமையிலான காக்கிகள் பழனிக்கு வந்து கண்ணன் குருக்கலின் மகனான சுகிசிவம் குருக்களிடம் ஒரு நாள் முழுவதும் அவரது வீட்டிலே அதிரடி விசாரணை நடத்தினார்கள். அதன் மூலம் மேலும் சிலை மோசடி சம்மந்தமாக  பலதகவல்கள் கிடைத்தன.  அதன்  அடிப்படையில் தான்  நேற்று  ஐ.ஜி மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் எஸ்பி ராஜாராம் மற்றும் சென்னை ஐஐடி உலோகவியில் போராசியர் முருகையா குழுவினரும் பழனிக்கு வந்து இணை ஆணையர் செல்வராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பின் ஐ.ஜி.யுடன் ஐஐடி குழுவினர் பழனிமலைக்கு  விசிட் அடித்து  அங்குள்ள ஐம்பொன் சிலை  மற்றும் தங்க ரதத்தில் உலாவரும் உற்சவரான சின்னக் குமாரசுவாமி. நவ வீரர்களை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் மொத்த எடை, உயரம், அது செய்யப்பட்ட ஆண்டு உள்ளிப்டவற்றை கேட்டு ஆய்வு செய்தனர்.

இது பற்றி சிலை தடுப்பு பிரிவு காக்கிகள் சிலரிடம் கேட்ட போது, 2004ம்ஆண்டு ஐம்பொன்சிலை செய்ததில் தங்கத்திலும், வெள்ளியிலும் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக தான் தற்பொழுது இரண்டாம் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதில் மீண்டும் ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர். அது போல் உற்சவரான சின்ன குமாரசாமி ஐம்பொன் சிலையும் சேதம் அடைந்ததுள்ளது என புகார் வந்ததின் பேரில் அதையும் ஆய்வு செய்தனர்.

அதுபோல் மற்றொரு ஐம்பொன் சிலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் வைத்துள்ளனர். அதையும் ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர். இப்படி  தொடர்ந்து  முருகன் உற்சவர் சிலைகளை ஆய்வு செய்து கொண்டும், கோவில் அதிகாரிகளிடமும் தொடந்து  ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் கோவில் அதிகாரிகள் உள்பட பணியாளர்களும் பீதியில் இருந்து வருகிறார்கள். இதனால் ஐம்பொன் சிலை மோசடி மற்றும் உற்சவர்  சிலைகள் ஆய்வு மூலம் சிலரை சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்யவும் வாய்ப்பு  உள்ளதாக பரவலாக  ஒரு பேச்சும் பழனியில் பரபரப்பாகி வருகிறது. என்பது தான் உண்மை.

-nakkheeran.in

TAGS: