ஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப் ஏளனம் செய்தார்

முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புபடுத்தப்பட்ட சொத்துகள் மீது போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர், நஜிப் பேச ஆரம்பித்துள்ளார்.

நேற்று, மலாய் மெயிலுடன் நடத்திய நேர்காணலில், ஜிஎஸ்டியை அகற்றுவது மற்றும் இதர பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவது பற்றி பக்கத்தான் ஹரப்பான் அளித்துள்ள வாக்குறுதிகளை நஜிப் வெறும் கனவு மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும் கூறினார்.

ஹரப்பான் அறிவித்துள்ள சீர்திருத்தங்களை அடைவதற்கான வழியே இல்லை என்று நஜிப் மேலும் கூறினார்.

தமது நிருவாகத்தின் தோல்விகள் என்று கூறப்பட்டதெல்லாம் தம்மை “கொடியவன்” என்று காட்டுவதற்காகத்தான் என்றாரவர்.