ரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த வாரம்

 

மேன்மக்கள் மன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக ரோபர்ட் குவோக் அடுத்த வாரம் மலேசியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதன் பேச்சாளர் எ. காடிர் ஜாசின் கூறினார்.

ஹோங்காங்கிலிருந்து அக்கோடீஸ்வரர் இங்கு வருவதற்குகான தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை என்று காடிர் மலேசியாகினியிடம் கூறினார்.

அவர் இங்கு வர திட்டமிட்டுள்ளார். அவர் உடல் நலமற்று இருக்கிறார். மேலும் அவருக்கு வயதும் அதிகமாகி விட்டது என்றாரவர்.

பிரதமர் மகாதிர் அவரை மேன்மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவராக நியமித்துள்ளார்.

அம்மன்றத்தின் இதர உறுப்பினர்கள் – முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடின், முன்னாள் பேங்க் நெகாரா கவர்னர் ஸெத்தி அக்டார் அசிஸ், முன்னாள் பெட்ரோனாஸ் தலைவர் முகமட் ஹசான் மரைக்கான், மற்றும் பொருளாதார நிபுணர் ஜோமோ குவாமே சுந்தரம் ஆகியோராவர்.