ரோப்ர்ட் குவோக் மேன்மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மேன்மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் முதல்முறையாகப் பங்கேற்றார்.

94 வயதான குவோக் இன்றையக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார். அவருடன் அம்மன்றத்தின் தலைவர் டைம் ஸைனுடினும் இருந்தார்.

அவர்களுடன் அம்மன்றத்தின் இதர உறுப்பினர்களான ஜோமோ கவமே சுந்தரம் மற்றும் பெட்ரோனாஸின் முன்னாள் தலைவர் முகமட் ஹசான் மரைக்கான் ஆகியோரும் இருந்தனர் என்று பெர்னாமா டிவிட் செய்துள்ளது.