சிலாங்கூர் புதிய மந்திரி பெசார் இன்னும் சில வாரங்களில் நியமிக்கப்படுவார், அஸ்மின் கூறுகிறார்

 

சிலாங்கூர் மாநில புதிய மந்திரி பெசார் இன்னும் சில வாரங்களில் நியமிக்கப்படுவார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி இன்று கூறினார்.

இது குறித்து நேற்று காலை சிலாங்கூர் அரண்மனை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கம் அளித்துள்ளேன். தாம் மத்திய அமைச்சரவைப் பதவியை ஏற்றுகொள்வதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அஸ்மின் மேலும் கூறினார்.

அரண்மனை புதிய மந்திரி பெசாரின் பெயரை அடையாளம் கண்டு ஒப்புதல் அளித்தவுடன் அவர் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று கூறிய அஸ்மின், இதற்கு சில வாரங்கள் பிடிக்கலாம் என்றார்.

இப்பதவிக்கு நல்ல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த விவகாரம் சிலாங்கூர் ஹரப்பானுக்குள் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அமிருடின் ஷாரி மந்திரி பெசாராக நியமிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.