அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? கமல் கேள்வி

நேற்று முதல் தூத்துக்குடியில் நடந்து வரும் கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா என கேட்டுள்ளார்.

“தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்.மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!” என கமல் கூறியுள்ளார்.

-cineulagam.com