சந்தானம் வர்றாரு… ஓடுங்க. தயாரிப்பாளர்கள் ரீயாக்ஷன்

சந்தானம் எவ்ளோ பெரிய காமெடியன்? ஆனால் மக்கள் அவரை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அவர் ஹீரோவாக நடித்த சில படங்களில் உணர வைத்துவிட்டது நிஜம்.

இருந்தாலும், முன்னோக்கி போட்ட பெடலை ரிவர்சில் சுற்றுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் அவர். எந்த தயாரிப்பாளரும் சந்தானத்தை நாடி வரவில்லை என்பது துரதிருஷ்டம்.

அவங்க வரலேன்னா என்ன? நாம போவோம் என்று முடிவெடுத்த சந்தானம், தன்னால் பெரும் கலெக்ஷன் பார்த்த தயாரிப்பாளர்களை தேடி தேடிப் போய் ஒரு உதவி கேட்கிறாராம். “என்னை வச்சு ஒரு படம் பண்ணுங்க.

சம்பளமோ, அட்வான்சோ ஒரு பைசா கூட வேணாம்” என்பதுதான் அது. அப்படியிருந்தும் ஆம்லெட் விரும்பா தோசைக்கல்லாக கரி முதுகு காட்டி ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

-4tamilmedia.com