ரஜினியின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நிலையில் சமீபத்தில் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பம் மற்றும் காயம் பட்டவர்களை சந்திக்க சென்றார்.

மேலும் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது ரஜினி ஆவேசமாக “சமூக விரோதிகள் போலீசை தாக்கியது தான் இந்த கலவரத்திற்கு காரணம்” என கூறினார். இந்த கருத்து கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தது.

இது பற்றி நடிகர் கமல்ஹாசன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். “போராடும் மக்கள் சமூக விரோதிகள் என்றால், நானும் சமூக விரோதிதான்” என அவர் கூறியுள்ளார்.

-cineulagam.com