காவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு கெடு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு இன்னும் உறுப்பினரை நியமிக்காததால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கர்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக உறுப்பினர்களின் பெயரை பரிந்துரைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 12ஆம் தேதிக்குள் உறுப்பினரை நியமிக்குமாறு கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. BBC_Tamil

TAGS: