நடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..

நடிகரும், ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் தமிழ்ச்சமூகத்தின் எதிரி ; விரோதி என ரஜினியை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற நடிகர் ரஜினி, போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் சமூக விரோதிகளே என கருத்து தெரிவித்திருந்தார். சமூக – அரசியல் தளத்தில் ரஜினியின் கருத்து கடும் கொந்தளிப்பினை உண்டாக்கியது.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த சீமான், “தங்கள் உரிமைகளை காத்துக்கொள்ள போராடிய மக்களை சமூக விரோதிகள் என சித்தரிக்கும் நடிகர் ரஜினியே ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கு எதிரி ; விரோதி. அவரை ஒருபோதும் அரசியல் தளத்தில் ஏற்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: