தீவிர நிலையை எட்டிய ஏமன் போர்: ஐ.நா. அவசர கூட்டம்

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியமான ஹூடேடா துறைமுக நகரத்தை கைப்பற்ற, சௌதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் நடத்தும் தாக்குதல் தீவிரமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் தனது நாட்டை சேர்ந்த 4 துருப்புகள் இறந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) உறுதி செய்துள்ளது. மேலும், இந்த மோதலில் 22 ஹூதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நகரின் விமானநிலையம் அருகே நடந்துவரும் மோதல் மிகவும் தீவிர நிலையை எட்டியுள்ளது என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.

இதனிடையே ஏமனில் நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) இன்று அவசர கூட்டம் ஒன்றை நடத்துகிறது. -BBC_Tamil