துணைப் பிரதமர்: புதிய அமைச்சர்கள் இவ்வாரம் அறிவிக்கப்படலாம்

பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்   வார  இறுதிக்குள்   புதிய   அமைச்சர்களை    அறிவிக்கக்கூடும்    என்று  துணைப்   பிரதமர்    டாக்டர்   வான்  அசிசா  வான்  இஸ்மாயில்   இன்று   கூறினார்.

செய்தியாளர்   கூட்டமொன்றில்  புதிய   அமைச்சர்கள்  நியமனம்   எப்போது    என்று   அவரிடம்   கேட்டதற்கு,  “இதே  கேள்வியைத்தான்  பிரதமரிடம்   நானும்   கேட்டேன்”,  என்றாரவர்.

“சில  நாள்களில்   என்றவர்  சொன்னார்,   அதனால்   வாரக்  கடைசிக்குள்   அற்விக்கப்படலாம்   என  நினைக்கிறேன்.

“அதைப்  பிரதமர்தான்   முடிவு    செய்ய   வேண்டும்”,  என்றார்.

இன்று  காலை    தம்  அலுவலகம்   வந்த   மலேசியாவுக்கான   ஜப்பானிய   தூதர்     மாக்கியோ  மியாகாவாவைச்  சந்தித்த  பின்னர்  வான்  அசிசா    செய்தியாளர்களிடம்   பேசினார்.