ஆடு திருடிய சிங்கள பொலிஸ்காரனை முன்னர் அடித்த இளைஞனை தான் இப்ப சுட்டுக் கொன்றுள்ளார்கள்

யாழ் மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம்(17) அன்று 28 வயதான இளைஞர் ஒருவர் சிங்களப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சில மர்மங்கள் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், சிங்களப் பொலிசார் ஒருவர் ஆடு ஒன்றை திருடிச் சென்றவேளை. அவரை மடக்கிப் பிடித்த சில இளைஞர்கள். மல்லாகம் பகுதியில் அவரை லேசாக தாக்கிவிட்டு. ஆட்டை திரும்பப் பெற்றுக்கொண்டு, குறித்த பொலிஸ்காரனை விடுவித்துள்ளார்கள்.

நேற்றைய தினம், அந்த 28 வயது இளைஞர் அவ்விடத்திற்கு வந்தவேளை. அருகே ஒரு இளைஞர் குழு ஒன்று பெரும் பிரச்சனையில் ஈடுபடுவது போல நாடகம் ஆடியுள்ளார்கள். அது ஆவா குழு என்று கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி. இந்த இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டு. ஆவா குழு தன்னை தாக்க வந்தது நான் சுட்டேன் என்று சிங்கள பொலிஸ்காரன் வாக்கு மூலம் கொடுத்துள்ளான். இது அனைத்துமே ஒரு செட்டப் என்ற்கிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

இப்படி ஒரு நாடகத்தை ஆடி, குறித்த இளைஞரை பழி தீர்த்துள்ளார்கள், இந்த சிங்களப் பொலிசார். இதுவே நடந்த உண்மை ஆகும். இன்று 18.06.2018 இன்னும் மல்லாகத்தில் மக்கள் ஓய்ந்த பாடாக இல்லை. பெரும் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

-athirvu.in

TAGS: